Tuesday, December 19, 2006

صفة الحج والعمرةhaj-umra guidance

சமர்ப்பணம்
இப்புத்தகத்தினை கடந்த
1425.12.03 க்குச் சரியாக
2005.01.13 ம் திகதி இவ்வுலக வாழ்க்கையினை முடித்துக் கொண்டு மறு உலக வாழ்க்கையினை அடைந்து கொண்ட எனதருமைத் தந்தை அவர்களின் செய லேட்டில் மறுமை வரை ஸதக்கத்துல் ஜாரியா எனும் நிலையான நன்மை பதியப்பட வேண்டும் எனும் நோக்கில் அவருக்கு ஸதக்காவாக சமர்ப்பிக்கின்றேன்.
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் எனது இச்சிறிய பணியினை அங்கீகரித்து உலகுள்ளவரை எனது தந்தையவர்களின் செயலேட்டில் நன்மைகள் பதியப்பட்டுக் கொண்டே இருக்கச் செய்வானாக. இன்னும் அவரின் அணைத்து பாவங்களையும் மன்னித்து அவனது அளவற்ற கருணையைக் கொண்டு அன்னாரை ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக.
ஆமீன்
இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன். ஜே.பி

நன்றி உரை

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لأَزِيدَنَّكُمْ سورة إبراهيم:7
நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; என்று உங்களுக்கு இறை வன் அறிக்கை இட்டதை (நினைவு கூறுங்கள்

அல்குர்ஆன்

عن أبي هريرة رضي الله عنه
عن النبي صلى الله عليه وسلم قال:
لا يشكر الله من لا يشكر الناس
( سنن أبي داود ج4:ص255- 4811
)
மனிதர்களுக்கு நன்றி செலுத்தா தவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த மாட்டான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா رضي الله عنه
நூல்:அபூ தாவூத்
அளவற்ற அருளாளனும,; நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருற்பெயர் கொண்டு ஆரம்பிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன், அவன் எனக்குச் செய்திருக்கும் அளப்பெரிய அருட்கொடைகளுக்காக அவனுக்கு முதலில் நான் நன்றி செலுத்துகின்றேன். அடுத்ததாக அகிலத்திற்கு அருளாக அனுப்பப்பட்ட அருமைத் தூதர் முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் மீது அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றென்றும் நிலவட்டும் என பிராத்தித்தவனாக,

இவ்வுலகில் என்னை பெற்று அமுதூட்டி வளர்த்த எனதருமை அன்னைக் கும், அறிவூட்டி வளர்த்த எனதருமை தந்தைக்கும் எனது பணிவான நன்றிகள் உரித்தாகும்.
அத்துடன் எல்லாம் வல்ல அல்லாஹ் எனதன்பு தந்தை அவர்களின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து அவனது அளவற்ற கருணையைக் கொண்டு அவரை அவனது உயர் சுவர்க்கத்தில் குடியமர்த்துவானாக. இன்னும் எனதன்புத் தாயின் வாழ்நாளை நீடிக்கச் செய்து அதிகமான நல்லமற்களைச் செய்யும் நல் வாய்ப்புக்களை அவருக்கு வழங்கி நாம் அனைவர்களும் உயர் சுவர்க்கத்தில் ஒன்று சேர அருள் செய்வானாக.
தொடர்ந்தும் எனது நன்றிகள் எனது ஆரம்ப பாலர் பாடம் முதல் இன்று வரை யாரெல்லாம் எனது ஆசானாகவிருந்து அச்சர மும் அறிவும் கற்றுக் கொடுத்தார்களோ அவர் கள் அனைவர்களுக்கும்; உரித்தாகும்.
அடுத்தாக எனது இன்றைய இவ்வுயர் நிலைக்கு வழியமைத்து எனது கல்வி கண்களைத் திறந்து எனது கல்வியிற்கு அஸ்திவாரம் இட்டுத் தந்த வள்ளல்களான பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அக்குரணை ஆறாம் கட்டையைச் சேர்ந்த பெருந்தகைகளான
m.i.m அஸ்ஹர், மற்றும் அவரன்புச் சகோதரர் அல்ஹாஜ் m.i.m ஸியாத் ஆகியோர்களுக்கும் எனது பணிவான நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் கள் எனக்கு செய்த நன்மையிற்கு நிச்சயமாக என்னால் கைமாறு செய்து விட முடியாது ஆகவே அவர்களுக்குரிய கை மாற்றினை வல்ல அல்லாஹ் நிறைவாக வழங்குவான் என அல்லாஹ்வின் மீதே ஆதரவு வைக்கின்றேன். அத்துடன் அவர்கள் இருவருடைய குடுப்பத் தினர்கள் அனைவர்களும் என்றும் எனது நன்றியிற்கு உரியவர்களே. அவர்கள் அனைவர் களுக்கும் நான் உயிருள்ள வரை கடமைப் பாடுடையவனே. எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய வாழ்க்கையிலும், செல்வத்திலும் பரகத் செய்வானாக. அவர் களையும,; அவர்களது பெற்றார்கள், மற்றும் மனைவி மக்கள் அனைவர்களையும் உயர் சுவர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக.
அடுத்ததாக இச்சிறு நூலை வெளியிட எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த ஹிஜ்ரி
1426 க்குச் சரியாக
2006 ம் ஆண்டு எனது வழிகாட்டலின் கீழ் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிய இந்திய தமிழ் நாடு, மற்றும் இலங்கையைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களும் எனது நன்றியிற்கு உரியவர்களே. இன்னும் எனக்கு இப்புத்தகத் தினை எழுதும் வாய்ப்பளித்து அதனைப் பிரசுரித்து வெளிட்ட அல்கஸீம் வெளிநாட்ட வர்களுக்கான வழிகாட்டல் நிலையத்தின் தலைமையகத்திற்கும் எனது நிறைவான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அல்லாஹ் நம் அனைவர்களையும் நன்றியுள்ள நல்லடியார்களில் ஆக்கியருள்வானாக.

இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்-jP
புரைதா – அல்கஸிம்,

صفـة الحـج والعمـرة
ஹஜ் உம்ரா செய்யும் முறை


الحمد لله والصلاة والسلام على رسول لله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் வின் அருற்பெயரால் ...

ஹஜ் என்பது இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளுள் ஐந்தாவது முக்கிய கடமை யாகும.; புனித மக்கா சென்று வர உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சக்தி இருந்தால் அவர் மீது புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாத கடமை யாகும். இது வாழ் நாளில் ஒரு முறைதான் கடமையாகும் அதன்பிறகு வசதி உள்ளவர்கள் அதிகமதிகம் செய்வதில் தவறு கிடையாது.
அவ்வாறே உம்ரா செய்வதும் புனித மக்கா சென்று வர உடல் ரீதியாகவும் பொரு ளாதார ரீதியாகவும் சக்தி இருந்தால் அவர் மீது வாழ் நாளில் ஒரு முறை உம்றா செய்வது கடமையாகும். இது பற்றி வல்ல அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.

وَأَتِمُّواْ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّهِ سورة البقرة 196
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ் வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.
முதலில் உம்ரா செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

உம்ரா செய்பவர் மீக்காத்தில் கடமை யான குளிப்பிற்குப் போன்று குளித்துக் கொள் வது சுன்னதாகும். முடியாவிட்டால் வுழு செய்து கொள்வது போதுமானதாகும். அத்து டன் அத்தர் போன்ற நறுமணங்களையும் ஆடையில் படாதவாறு தலை மற்றும் தாடிகளுக்குப் பூசிக்கொள்ளலாம். இஹ்ராம் செய்ததன் பிறகு பூசக் கூடாது.
மீக்காத்தில் அல்லது அதற்கு முன் தனது உடலில் மர்மஸ்தானம், மற்றும் அக்குள் போன்றவற்றில் உள்ள உரோமங்களை அகற் றிக் கொள்ளல் சிறந்ததாகும்.
இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா செய்யச் செல்லும் ஒருவர் அந்த வணக்கத்திற்க்கு நிய்யத் வைத்து குறிப்பிட்ட அந்த வணக்கத்திற்குள் நுழை தலாகும் மீக்காத் என்பது எல்லையாகும் அதாவது ஹஜ் அல்லது உம்ரா செய்யச் செல்லும் ஒருவர் இஹ்ராம் செய்கின்ற இடத்திற்கு மீக்காத் என்று சொல்லப்படும் இவ்வாறான இடங்கள் ஐந்து உண்டு.
1-thulhulayfa
2-aljahfa
3-yalamlam
4-thathu irq
5-karnal manazil

இவைகள்தாம் இஹ்ராம் செய்வதற்குரிய எல்லைகளாகும் இவைகளில் ஒன்றன் ஊடாக செல்பவர் அந்த இடத்தில் குளித்து அல்லது வுழு செய்து கொண்டதன் பிறகு பின் வருமாறு வாயால் மொழிதல் வேண்டும்

أَللّهُمِّ لَبَّيْكَ عُمْرَةً
அல்லாஹும்ம லbப்பைக்க உம்ரதன்

பொருள்:-
யா அல்லாஹ், இதோ! உம்ராவுக்காக உன்னிடம் ஆஜராகி விட்டேன்

ஆகாயமார்க்கமாகச் செல்பவர்கள் தாம் விமானத்தில் ஏறுவதற்கு முன் மீக்காத்தில் செய்ய வேண்டியவைகளைச் செய்து கொள்ள வேண்டும் நிய்யத்தை மட்டும் மீக்காத்தைக் கடக்கும் போது செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பட்ட அந்த வணக்கத்திற்கு நிய்யத் வைத்து அந்த வணக்கத்திற்குள் பிர வேசிப்பதற்கு முன் தான் அணிந்திருக்கும் தைக் கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் களை ந்து இங்கு உள்ள படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு தைக்கப்படாத ஒரு வெண்ணிற வேஷ்டியும், ஒரு வெண்ணிற மேலாடையும் ஒரு காலணியும் மாத்திரம் அணிந்து கொள்ள வேண்டும். கை கடிகாரம், பெல்ட் போன்றவைகள் அணிவது தடை கிடையாது
இது ஆண்களுக்கு மாத்திரமே பெண் கள் தங்கள் அலங்காரத்தைக் வெளிக் காட்டாத வகையில் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
அத்துடன்; மீக்காத்திலிருந்து கஃபா வை அடையும் வரை பின்வரும் தல்பியாவை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டே செல்லல் வேண்டும்.


لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْد وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ.

லப்bபைக் அல்லாஹும்ம லப்bபைக், லப்bபைக் லா ஷரீக்க லக்க லப்bபைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல் முல்க், லா ஷரீக்க லக்.
பொருள்:- இதோ உன்னிடம் ஆஜராகி விட்டேன். அல்லாஹ்வே! இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது, இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், அனைத்து அருற்களும், ஆட்;சியும் உனக்கே சொந்தம், உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது.


பிறகு கஃபாவில் நுழையும்போது பின் வரும் துவாவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْل الِلّهِ رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

bபிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி ரபடீபிஃபிர்லீ துனூபீ வப்தஹ் லீ அப் bவாbப ரஹ்மதிக்க
இந்த துஆ அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவானதே.

தவாப் طواف

தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை சுத்தி வலம் வருதலாகும்.
தவாஃபை ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பட்ட மூலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். முடியுமாயின் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும.; முடியா விட்டால் கையால் அல்லது கைத்தடியால் தொட்டு கையை அல்லது கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம். அதுவும் முடியா விட்டால் அதை நோக்கி கையால் சைகை செய்து கொண்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும்.
ஹஜருல் அஸ்வத் என்பது கஃபாவின் கதவுடன் ஒட்டினாற்போல் உள்ள மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கறுப்பு கல்லாகும்.

ஹஜருல் அஸ்வதிற்கு நேர் எதிரே பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் பச்சை மின் விழக்கி (லைட்டி) ற்கு நேரே எந்த இடத்தில் நின்று கொண்டு கஃபாவை நோக்கி கையால் சைகை செய்தாலும் போதுமானதாகும். அவ்வாறு பள்ளியின் அனைத்து மேல் மாடி களிலும் தவாப் செய்யலாம். அப்படி ஹஜருல் அஸ்வதை அல்லது அதைத் தொட்ட கைத் தடியை அல்லது கையை முத்தமிடும் போது அல்லது அதன் பக்கம் கையால் சைகை செய்யும் போது

بِسْمِ اللهِ اَللهُ اَكْبَرْ

bபிஸ்மில்லாஹி, அல்லாஹுஅக்பbர்
என்று சொல்ல வேண்டும்.

குறிப்பு:-சைகை காட்டிய கையை முத்தமிடக் கூடாது.
தவாஃப் சுற்றி வரும்போது ருக்குனுல் யமானி எனும் மூலைக்கும் ஹஜருல் அஸ்வ திற்கும் இடையில்


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

என்று ஓதுதல் சுன்னததாகும்

ருக்குனுல் யமானி என்பது ஒரு மனிதன் ஹஜருல் அஸ்வதை முன்னோக்கி நிற்கும் போது அவனது இடது புறத்தில் உள்ள கஃபாவின் மூலையாகும் முன்பக்கத்தில் உள்ள படத்தில் பார்க்கவும்.

 இப்படியாக கஃபாவை ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.
 அதில் முதல் மூன்று சுற்றுக்களிலும் முடியுமாயின் வேகத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
 ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதைத்
தாண்டிச் செல்லும் போதெல்லாம் அதன் பக்கம் கையைக் காட்டி அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும். பிஸ்மில்லாஹ் என்று சொல்லக் கூடாது.

அத்துடன் தவாஃபின் அனைத்து சுற்றுக்களின் போதும் தமக்குத் தேவை யான துஆக்களை தமக்குத் தெரிந்த மொழியில் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு தவாப் செய்யும் போது இங்கே படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண் டும்.

தவாஃப் செய்து முடிந்தவுடன் மகாமு இப்றாஹீமுக்கு அருகில் சென்று இரண்டு ரகஆத்துக்கள் சுன்னத் தொழ வேண்டும் அங்கு இடம் கிடைக்கா விட்டால் பள்ளியில் எந்த இடத்திலேனும் தொழுது கொள்ளலாம். இத்தொழுகையில் முதலாம் 'ரகஅத்தில்' சூரத்துல் பாத்திஹாவிற்குப் பிறகு ''குல் யா அய்யுஹல் காபிரூன்'' எனும் 'சூராவையும,; இரண்டாவது 'ரகஅத்தில'; 'சூரத்துல் பாத்திஹா'விற்குப் பிறகு 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் சூராவையும் ஓத வேண்டும் தெரியாதவர்கள் தமக்குத் தெரிந்த ஏதாகிலும் சூராக்களை ஓதிக்கொள்ளலாம். தொழும் போது மேலாடையால் தோள் புஜத்தை மூடிக் கொள்ள வேண்டும்.

மகாமு இப்றாஹீம் என்பது நபி இப்ராகிம் عليه السلام அவர்கள் கஃபாவைக் கட்டியபோது ஏறி நின்ற ஒரு கல்லாகும் இது கஃபாவின் கதவுக்கு நேரே சற்று வலது புறமாக கண்ணாடி பெட்டியில் வைக்கப் பட்டுள்ளது.
பிறகு ஜம்ஜம் தண்ணீரை வயிறு நிறைய குடிக்க வேண்டும். பள்ளியின் அனைத்து பக்கங்களிலும் வைக்கப் பட்டிருக்கும் அனைத்து தண்ணீர்களும் ஜம்ஜம் தண்ணீ ரேயாகும். தமக்கு வசதியான எந்த இடத்திலும் குடித்துக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஸயீ செய்ய வேண்டும்.

ஸயீ –السعي

ஸயீ என்பது கஃபாவிற்கு எதிரே அமைந் துள்ள ஸஃபா மர்வா ஆகிய இரு மலைகளுக் கிடையில் தொங்கோட்டம் ஓடுதலாகும்.

இத்தொங்கோட்டம் ஏழுமுறைகள் ஓட வேண்டும்.
ஸயீ செய்யும் முறை
ஸஃபா குன்றின் மீது கஃபா தெரியும் வரை ஏறி கிப்லாவை முன்நோக்கி நின்று கொண்டு கஃபாவை நோக்கி கையால் சைகைக் காட்டிக் கொண்டு



إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதனைத் தொடர்ந்து பின் வரும் தஹ்லீலை ஓத வேண்டும்

اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ اَللهْ اَكْبَرْ لَا إِلهَ إِلَّا اللهُ وَالله ُاَكْبَرْ لَا إِلهَ إِلَّا الله ُوَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتْ وَهُوَ عَلََى كُلِّ شَيْءٍ قَدِيْرْ لَا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَهَزَمَ الْأحْزَابَ وَحْدَهْ.
(3 مرات)

அல்லாஹு அக்பbர், அல்லாஹு அக்பbர், அல்லாஹு அக்பbர், லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பbர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத் வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் லா இலாஹ இல்லால்லாஹு வஹ்தஹ,; அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்bதஹ், வஹஸமல் அஹ்ஸாபb வஹ்தஹ்,

இவ்வாறு (மூன்று தடவைகள்) ஓத வேண்டும் ஒவ்வொரு முறையும் இதனை ஓதிய பிறகு இம்மை மறுமை தொடர்பான தன் தேவைகள் அனைத்தையும் தமக்குத் தெரிந்த பாஷையால் கேட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.
ஸஃபாவில் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்து விட்டு அங்கிருந்து மர்வாவிற்குச் செல்ல வேண்டும் மர்வா குன்றில் ஏறி நின்று கொண்டு, ஸஃபாவில் செய்தது போன்று செய்ய வேண்டும். ஆனால் இங்கு ஸஃபா மலையில் ஓதிய குர்ஆன் வசனத்தை ஓதக்கூடாது. இவ்வாறு ஒரு தடவை செய்ததுடன் ஸயி உடைய ஏழு சுற்றுக்களில் ஒரு சுற்று முடிந்து விடுகிறது.

இவ்வாறு ஸயீ செய்யும் போது ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் உள்ள பச்சை விளக்கு (லைட்) இரண்டிற்கும் இடையில் ஆண்கள் சற்று வேகமாக ஓடிச் செல்லல் வேண்டும். இப்படியாக ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கு செல்வது ஒரு சுற்று என்றும் மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு செல்வது ஒரு சுற்று என்றும் கணக்கெடுக்கப்படும். அதன்படி ஸயீ ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவ டையும்.
அதன் பிறகு தலை முடியை மொட்டையடிக்க வேண்டும் அல்லது அனைத்து முடிகளையும் கட்டையாக வெட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் உம்ரா நிறைவு பெறுகின்றது. இஹ்ராமின் போது தடுக்கப்பட்டிருந்த அனைத்திற்கும் தடை நீங்கிவிடும்
ஹஜ்ஜின் வகைகள்
ஹஜ் மூன்று வகைப்படும்
1. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع
2. ஹஜ் ஜுல் கிரான் حج القران
3. ஹஜ் ஜுல் இப்ராத் حج الافراد

ஹஜ் தமத்துஉ حج التمتع
இது ஒரே வருடத்தில் ஒரே பயணத்தில் உம்ரா ஹஜ் ஆகிய இரு வணக்கங்களையும் வௌ;வேறாகப் பிரித்து முன்னர் விபரிக்கப் பட்ட பிரகாரம் முதலில் உம்ராவை முடித்து இஹ்ராமை களைந்து விட்டு மீண்டும் துல்ஹஜ் பிறை 8 ம் நாள் ளுஹருக்கு முன்னதாக அல்லது 9ம் நாள் முடிவதற்குள்ளாக தாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் நிய்யத் செய்வ தாகும். இவர்

மீகாத்தில்
أَللّهُمِّ لَبَّيْكَ عُمْرَةً

அல்லாஹும்ம லbப்பைக உம்ரதன்
பொருள்: யா அல்லாஹ், இதோ! உம்ரா வுக்காக ஆஜராகி விட்டேன் என்று கூறுவார்.

இவர் உம்ராவை முடித்து விட்டு மீண்டும் ஹஜ்ஜிக்காக இஹ்ராம் செய்து கொள்ளும் வரை இஹ்ராமை களைந்து கொள்ள முடியம். இவருக்கு இஹ்ராமின் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கி விடும்.

ஹஜ் கிரான்
இது உம்ராவையும், ஹஜ்ஜையும் ஒன்றாக சேர்த்துச் செய்வதாக நிய்யத் செய்வதாகும். இவர் மீகாத்தில்,

أللهم لبيك عمرة وحجا
அல்லாஹும்ம லbப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று சொல்ல வேண்டும்.
பொருள்:-
யா அல்லாஹ், இதோ! உம்ரா வுக்காகவும் ஹஜ்ஜிக்காகவும் ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார்.

இவ்வாறு ஹஜ்ஜை உம்ராவுடன் சேர்த்து செய்வதாக நிய்யத் செய்தவர் உம்ராவுக்குரிய ஸயீயை முடித்து விட்டு துல்ஹஜ் ஆம் நாள் தலைமுடியை மழிக்கும்வரை அல்லது குறைத்துக் கத்தரிக்கும் வரை இஹ்ராமுடனேயே இருக்க வேண்டும்.

ஹஜ் இப்ராத்
இது ஹஜ் மட்டும்; செய்தலாகும். இவர் மீக்காத்தில்
أللهم لبيك حجا
அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன்
என்று சொல்ல வேண்டும்.
பொருள்:-
யா அல்லாஹ், இதோ! ஹஜ்ஜிக்காக ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார்.

இவ்வாறு ஹஜ் மட்டும் செய்வதற்கு நிய்யத் வைத்துக் கொண்டவர் தவாஃபுல் குதூம் (மக்காவில் நுழைந்தவுடன் செய்யும் தவாஃப்) மட்டும் செய்து விட்டு துல்ஹஜ்
10ஆம் நாள் தலைமுடியை மழிக்கும் வரையில் இஹ்ராம் உடனேயே இருக்க வேண்டும்.
இவர் மீக்காத்தில் இருந்து மக்கா வுக்குள் நுழையாது நேரே மினாவுக்குச் செல்பவராக இருந்தால் அவர் தவாஃபுல் குதூம் செய்ய மாட்டார்.

மேலே விவரிக்கப்பட்ட அனைவரும் அவர வருக்குரிய வணக்கத்திற்கு நிய்யத் வைத்து வணக்கத்தில் பிரவேசித்து விட்டார்களாயின் மீக்காத்திலிருந்து பெருநாளன்று ஜம்ரதுல் அகபாவில் கல் எறியும் வரை பின் வரும் தல்பியாவை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْد وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ.
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக லா ஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க், லா ஷரீக்க லக்.

அடுத்து ஹஜ்ஜிக்குரிய கிரியைகள்
துல் ஹஜ் பிறை
8 ஆம்; நாளிலிருந்து ஆரம்பமாகும்.

8 ஆம் நாள் செய்ய வேண்டியவை

ஹஜ் தமத்துவு செய்பவர் தாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் தரித்து நிய்யத் செய்து கொள்ள வேண்டும். ஹஜ் கிரான் அல்லது ஹஜ் இப்ராத் செய்பவர்கள் முன்னர் செய்து கொண்ட இஹ்ராமுடனேயே இருப்பார்கள்.
அடுத்ததாக அன்றய தினம் அனைத்து ஹாஜிகளும் மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு சென்று ழுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகைகளை அங்கு தொழ வேண்டும். அவற்றில் நான்கு ரகஅத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் அந்தந்த நேரத்தில் தொழ வேண்டும்.

மினா என்பது மக்காவிலிருந்து சுமார்
7 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு புனித இடமாகும்.


இவ்வாறு துல் ஹஜ் பிறை
8 ம் நாள் மினாவில் தங்குவது சுன்னத்தாகும்
9 ஆம் நாள் செய்ய வேண்டியவை

மினாவிலிருந்து ஸுப்ஹுக்குப் பின்பு சூரியன் உதித்த பிறகு தல்பியா கூறிய வண்ணம் அரபாவை நோக்கிச் செல்ல வேண்டும் அங்கு சென்று அங்கு ழுஹர், அஸர் ஆகிய இரண்டு தொழுகைகளையும் ளுஹ ருடைய நேரத்தில் சேர்த்து சுருக்கி ஜம்உ கஸ்ராகத் தொழ வேண்டும்.
அடுத்து சூரியன் நன்கு மறையும் வரை அங்கு தங்கியிருந்து திக்ர் துஆ போன்ற வற்றில் ஈடுபடல் வேண்டும். சூரியன் மறைந்து விட்டால் அரபாவிலிருந்து முஸ்தலிஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். அங்கு சென்று மஃரிப், இஷா ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்தும், இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கியும் தொழ வேண்டும். அன்று இரவு முஸ்தலிபாவில் தங்க வேண்டும்.
அரபா என்பது மக்காவிலிருந்து மினா வழியாக சுமார்
20 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு மாபெரும் மைதானமாகும் இது ஒரு புனித ஸ்தலமாகும் இங்குதான் நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜின் இறுதிப் பேருரை யினை நிகழ்த்தினார்கள்.

முஸ்தலிபா என்பது மினாவைத் தொடர்ந்து அரபாவிற்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு புனித இடமாகும்

10 ம் நாள் செய்ய வேண்டியவைகள்
1. ஹாஜி சுபஹ் தொழுது விட்டு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொண்டு மினாவிலுள்ள ஜம்ரதுல் அகபா எனும் இடத்திற்குச் சென்று கல்லெறிதல்.
2. ஹஜ் தமத்துவு அல்லது ஹஜ் கிரான் செய்பவர்கள் குர்பானி கொடுத்தல்.
3. தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல் (பெண்கள் தலை முடிகளில் விரல் நுணியளவு வெட்டிக் கொள்ளுதல் போதுமானதாகும்) (இத்துடன் இஹ்ராமின் தடைகள் அனைத்தும் நீங்கி விடும் உடலுறவு கொள்வதைத் தவிர)
4. கஃபாவிற்க்குச் சென்று தவாஃபுல் இஃபாழா எனும் ஹஜ் உடைய தவாஃபை நிறை வேற்றுதல்.
5. அடுத்து ஹஜ் உடைய ஸயீயை நிறை வேற்றுதல். (ஹஜ் கிரான் அல்லது ஹஜ் இப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் உடன் ஸயீ செய்திருந்தால் அவர்கள் இன்றய தினம் ஸயீ செய்யத் தேவை யில்லை. இத்துடன் உடலுறவு உட்பட இஹ்ராமின் தடைகள் அனைத்தும் நீங்கிவிடும்)
6. அன்றய இரவு மினாவில் தங்குதல்.

11ஆம் நாள் செய்ய வேண்டியவை
1. மூன்று ஜம்ராக்களீலும் கல்லெறிதல்.
2. அன்றய இரவும் மினாவில் தங்குதல்

12 ஆம் நாள் செய்ய வேண்டியவை
1. மூன்று ஜம்ராக்களீலும் கல்லெறிதல்.
2. 12 ம் நாளுடன் ஊர் திரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன்னதாக மினாவை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
3. 12 ம் நாளுடன் ஊர் திரும்புபவர்கள் கஃபா சென்று தவாஃபுல் வதா எனும் விடை பெறும் தவாஃபை நிறைவேற்றுதல்.

13ஆம் நாள் செய்ய வேண்டியவை
1. மூன்று ஜம்ராக்களீலும் கல்லெறிதல்.
2. கஃபாவிற்க்குச் சென்று தவாஃபுல் வதா எனும் விடை பெறும் தவாஃபை நிறை வேற்றல்.
3. அதன்பின் மக்காவில் தாமதிக்காது திரும்பி விடல்


ஜம்ராக்கள் என்பது கல் எறிகின்ற இடங்களாகும் அவைகளாவன

கல் எறியும் முறை
• 21 சிறிய கற்களை எடுத்துக் கொண்டு ஜம்ரதுல் சுக்ரா எனும் முதலாவது கல் எறிய வேண்டிய இடத்திற்குச் சென்று அங்கு ஏழு கற்களை அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஒவ்வொன்றாக எறிய வேண்டும். அதன் பின் வலது பக்கமாக சென்று கிப்லாவை முன்னோக்கி நின்ற வாறு நீண்ட நேரம் துஆ செய்வது சுன்னத்தாகும்.
• ஜம்ரது;துல் வுஸ்தா எனும் கல் எறியும் இரண்டாவது இடத்திற்க்குச் சென்று முன்பு போன்றே ஏழு கற்களை ஒவ் வொன்றாக அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எறிய வேண்டும். அதன் பின் சற்று இடது பக்கமாகச் சென்று கிப்லாவை முன்னோக்கி நின்றவாறு நீண்ட நேரம் துஆ செய்வது சுன்னத் தாகும்.
• ஜம்ரத்துல் குப்ரா எனும் கல் எறியும் மூன்றாவது இடத்திற்குச் சென்று அங்கும் ஏழு கற்க்களை ஒவ்வொன்றாக அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எறிய வேண்டும் அதன் பின் அங்கு நிற்கவோ துஆ செய்யவோ கூடாது.

ஹஜ்ஜின் பர்ழுகள்:
1. இஹ்ராம் நிய்யத் செய்தல்
2. அரபாவில் தரித்தல்
3. தவாஃபுல் இஃபாழா எனும் பெருநாள் அன்று செய்ய வேண்டிய தவாஃப் செய்தல்
4. ஸஃபா மர்வாக்கிடையே ஸயீ எனும் தொங்கோட்டம் ஓடுதல்

ஹஜ்ஜின் வாஜிபுகள்
1. மீக்காத்தில் இஹ்ராம் நிய்யத் வைத்தல்
2. பகலில் அரபாவில் நுழைந்தவர்கள் சூரியன் மறையும் வரை அங்கு தங்கி இருத்தல்.
3. துல் ஹஜ் 10 ம் இரவு முஜ்தலிபாவில் தங்குதல்.
4. அய்யாமுத் தஷ்ரீக் உடைய இரவுகளில் மினாவில் தங்குதல்.
5. வரிசை பிரகாரம் ஜம்ராக்களில் கல் எறிதல்.
6. தலை முடியை சிரைத்தல் அல்லது கட்டையாக வெட்டுதல்.
7. தவாஃபுல் வதா எனும் பிரியா விடைத் தவாஃப் செய்தல்.


இஹ்ராமில் தவிர்க்கப்பட வேண்டியவைகள்;
 வீண் பேச்சுக்கள் பேசுதல்
 பொய் பேசுதல்
 பிறரைப் பரிகசித்தல்
 மற்றவர்களை நோவினைசெய்தல்
 வீண் விவாதங்களில் ஈடுபடுதல்.



இஹ்ராமில் குற்றப்பரிகாரத்தினை ஏற்படுத்தும் செயற்கள்
• தலை மற்றும் உடலின் பிற பாகங்களில் உள்ள முடிகளைக் கத்தரித்தல் அல்லது சிரைத்தல்.
• நகம் வெட்டுதல்.
• வாசணை பூசுதல்
• திருமணம் செய்தல்.
• திருமணம் சம்மந்தப்பட்ட விவகாரங் களில் ஈடுபடுதல்
• உடலுறவு கொள்ளுதல்.
• மனைவியை இச்சையுடன் பார்த்தல், முத்தமிடல், கட்டியணைத்தல்.
• வேட்டையாடுதல்.

ஆண்களுக்கு மட்டும் தனியானவைகள்
• தைக்கப்பட்ட ஆடைகளை அணிதல்.
• தலையை மறைத்தல்,
• காலுறை அணிதல்

பெண்களுக்கு மட்டும் தனியானது
• நிக்காப் எனும் இருகண்களுக்கு மட்டும் துவாரம் இடப்பட்ட முகமூடி அணிதல்.
• மேற்கூறப்பட்ட இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்தால் அவர் பாவியாவதுடன் அவர்மீது அதற்கான குற்றபரிகாரம் கொடுப்பதும் கடமையாகும்.
• தேவைக்காக செய்தால் அவர் பாவியாக மாட்டார் என்றாலும் அவர்மீது அதற்கான குற்றப்பரிகாரம் கொடுப்பது கடமை யாகும்.
• அறியாமல் அல்லது மறதியாக செய்தால் மன்னிக்கப்பட்டு விடுவார். அவர் மீது எந்தக் குற்றமுமில்லை, குற்றப் பரிகாரமு மில்லை.


தொகுப்பு:
மௌலவி முனாப் நுபார்தீன் (அழைப்பாளர்)
வெளிநாட்டவர்களுக்கான வழிகாட்டல்
தலைமை நிலையம்
(தமிழ், சிங்கள பிரிவு)
த.பெ.இல.142, புரைதா –அல்கஸீம்
சவூதி அரேபியா
தொ.பே.
00966 6 324 8980-116
0561568056
தோ.நகல்:-
3245414
08 ம் நாள் அனைத்து ஹாஜிகளும் ழுஹருக்கு முன்னதாக மினாவிற்குச் சென்று அடுத்தநாள் பஜ்ர் வரை அங்கு தங்குதல் அங்கு நான்கு ரகஆத்து க்களுடைய தொழுகைகளை இர ண்டு ரக்கஅத்தாக சுருக்கி உரிய நேரத்தில் தொழ வேண்டும். ஹஜ் தமத்துவு செய்பவர் தாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஹஜ்ஜுக் காக இஹ்ராம் தரித்து நிய்யத் செய்து கொண்டு அவர்களும் மினாவிற்குச் சென்று விட வேண்டும்.

09 ம்நாள் மினாவிலிருந்து சூரியன் உதித்த பிறகு அரபாவுக்குச் செல்லுதல் அங்கு ழுஹர் அஸர் ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்து சுருக்கி தொழுதல் சூரியன் மறைந்தவுடன் அங்கிருந்து முஸ்த லிபாவுக்கு வந்து மஃரிப் இஷா ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்தும் இஷாவை சுருக்கியும் தொழுது விட்டு அன்றய இரவு அங்கு தங்குதல்





















كيفية الدخول في النسكவணக்கத்திற்குள் நுழையும் முறை


كيفية الدخول في النسك
ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்திற்குள் நுழையும் முறை
كيفية الدخول في النسك

قال الله عز وجل:

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ} (197) سورة البقرة

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;.
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் சிறந்தது தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்)

தக்வா உடையோர்களின் அமற்களையே அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்

إنه سبب قبول العمل حيث يقول عز وجل: {إِنَّمَا يَتَقَبَّلُ اللّهُ مِنَ الْمُتَّقِينَ} (27) سورة المائد

உண்மையாகவே அல்லாஹ் பயபக்தியுடையவர்களிட மிருந்துதான் ஏற்றுக் கொள்வான்.) (அல்குர்ஆன்)


 ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்திற்குள் நுழையும் முறை

நாம் மீக்காத் எனும் நிய்யத் வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடத்தினை அடைந்ததும் முதலாவது இஹ்ராம் நிய்யத் செய்வது கொண்டு ஹஜ் உம்ரா போன்ற கிரியைகளை ஆரப்பிக்க வேண்டும்.

இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா செய்யச் செல்லும் ஒருவர் அந்த வணக்கத்திற்க்கு நிய்யத் வைத்து குறிப்பிட்ட அந்த வணக்கத்திற்குள் நுழை தலாகும்

இவ்வாறு குறிப்பட்ட வணக்கத்திற்கு நிய்யத் வைத்து வணக்கத்தில் பிரவேசிப்பதற்கு முன் பின்வரும் கருமங்களை செய்து கொள்ளல் வேண்டும்.

1. தனது உடலில் மர்மஸ்தானம், மற்றும் அக்குள் போன்றவற்றில் உள்ள உரோமங்களை அகற்றிக் கொள்ளல் வேண்டும்;

2. நபி صلي الله عليه وسلم அவர்களின்: ',உங்களில் ஒருவர் இஹ்ராமில் ஒரு வேஷ்டியையும் ஒரு மேலாடையையும் இரு காலணிகளையும் அணிந்து கொள்ளட்டும். பெண்கள்; நிக்காப் எனும் இருகண்களுக்கு மட்டும் துவாரம் இடப்பட்ட முகமூடி அணிதலையும், கையுறை அணிதலையும் தவிர்த்து தங்கள் அலங்காரத்தை வெளிக்காட்டாத வகையில் தாம் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளட்டும்.' எனும் கட்டளைக்கிணங்க ஆண்கள் தாம் அணிந்திருக்கும் தைக்கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் களைந்து தைக்கப்படாத ஒரு வெண்ணிற வேஷ்டியும், ஒரு வெண்ணிற மேலாடையும் ஒரு காலணியும் மாத்திரமே அணிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் அலங்காரத்தைக் வெளிக்காட்டாத வகையில் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

3. ஆண்கள் தங்கள் ஆடைகளில் படாதவாறு நறுமணம் பூசிக் கொள்ளுதல்

 ஹஜ் உம்ரா போன்ற கிரியைகளின் நிய்யத்

ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடிய ஒருவர் குளித்து இஹ்ராத்திற்குரிய ஆடைகளை அணிந்து கொண்டதன் பிறகு பின்வருமாறு வாயால் மொழிதல் வேண்டும். நபி صلي الله عليه وسلم அவர்கள் லடீப்பைக்க உமரத்தன் வஹஜ்ஜன் என்று கூற நான் கேட்டேன் எனும் அனஸ் رضي الله عنه அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அவர் ஹஜ் செய்பவராக இருந்தால் லbப்பைக்க ஹஜ்ஜன் அல்லது அல்லாஹும்ம் லbப்பைக்க ஹஜ்ஜன்; என்று சொல்வார் அவர் உம்ரா செய்பவராக இருந்தால் லbப்பைக்க உமரத்தன் அல்லதுஅல்லாஹும்ம லbப்பைக்க உம்ரத்தன்; என்று சொல்வார்

 ஹஜ்ஜின் வகைகள்

ஹஜ் உடைய மாதங்களில் அதற்குரிய மீக்காத்தை அடையும் ஒருவர் பின்வரும் மூன்று வகைகிரியைகளில் தாம் விரும்பிய ஒன்றைத் தெரிவு செய்து கொள்வார்.


1. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع
இது ஒரே பயணத்தில் உம்ரா ஹஜ் ஆகிய இரு வணக்கங்களையும் வௌ;வேறாகப் பிரித்து முதலில் உம்ராவை முடித்து இஹ்ராமுடைய உடையை களைந்து விட்டு மீண்டும் ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் நிய்யத் செய்வதாகும்.
இவர் மீகாத்தில்

أَللّهُمِّ لَبَّيْكَ عُمْرَة متمتعة بها إلي الحج
அல்லாஹும்ம லbப்பைக உம்ரதன்
முத்தமத்தியத்தன் பிஹா இலல் ஹஜ்
(பொருள்: யா அல்லாஹ், இதோ! உம்ரா வுக்காக ஆஜராகி விட்டேன்
உம்ராவுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றவுள்ளேன்) என்று கூறுவார்.
இவர் உம்ராவை முடித்து விட்டு மீண்டும் ஹஜ்ஜிக்காக இஹ்ராம் செய்து கொள்ளும் வரை இஹ்ராமை களைந்து கொள்ள முடியும். இவருக்கு இஹ்ராமின் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கி விடும். பிறகு இவர் துல்ஹஜ் 9ம் நாள் முடிவதற்குள்ளாக ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் நிய்யத் செய்வதாகும். இவர் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும்.

2. ஹஜ் இப்ராத் حج الافراد
இது ஹஜ் மட்டும்; செய்தலாகும். இவர் மீக்காத்தில்

أللهم لبيك حجا
அல்லாஹும்ம லbப்பைக்க ஹஜ்ஜன் என்று சொல்ல வேண்டும்.
பொருள்:- யா அல்லாஹ், இதோ! ஹஜ்ஜிக்காக ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார்.

இவ்வாறு ஹஜ் மட்டும் செய்வதற்கு நிய்யத் வைத்துக் கொண்டவர் தவாஃபுல் குதூம் (மக்காவில் நுழைந்தவுடன் செய்யும் தவாஃப்) மட்டும் செய்து விட்டு துல்ஹஜ் 10ஆம் நாள் தலைமுடியை மழிக்கும் வரை அல்லது குறைத்துக் கத்தரிக்கும் வரை இஹ்ராம் உடைய உடையுட னேயே இருக்க வேண்டும். அவர் குர்பான் கொடுக்கத் தேவையில்லை.

3. ஹஜ் கிரான் حج القران
இது உம்ராவையும், ஹஜ்ஜையும் ஒன்றாக சேர்த்துச் செய்வதாக நிய்யத் செய்வதாகும். இவர் மீகாத்தில்,

أللهم لبيك عمرة وحجا
அல்லாஹும்ம லbப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று சொல்ல வேண்டும்.
பொருள்:-யா அல்லாஹ், இதோ! உம்ராவுக்காகவும் ஹஜ்ஜிக்காகவும் ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார். அல்லது உம்ராவிற்கு மட்டும் நிய்யத் செய்து உம்ராவுக்குரிய தவாஃபை நிறைவேற்றுவதற்கு முன் உம்ராவுடன் இணைத்து ஹஜ்ஜையும் செய்வதாக நிய்யத் செய்து கொள்வார்.

இவ்வாறு ஹஜ்ஜை உம்ராவுடன் சேர்த்து செய்வதாக நிய்யத் செய்தவர் உம்ராவுக்குரிய ஸயீயை முடித்து விட்டு துல்ஹஜ்
10 ம் நாள் தலைமுடியை மழிக்கும் வரை அல்லது குறைத்துக் கத்தரிக்கும் வரை இஹ்ராம் உடைய உடையுடனேயே இருக்க வேண்டும். இவர் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும்.



 மூவகை கிரியைகளும், அவைகளுள் சிறந்ததும்.
1. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع ஹஜ் கிரான் حج القران ஆகிய இரண்டும் ஹஜ்ஜும் உம்ரா வும் கலந்தது. ஹஜ் இப்ராத் حج الافراد என்பது ஹஜ் மட்டும் செய்தலாகும்.

2. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع ஹஜ் கிரான் حج القران ஆகிய இரண்டுக்கும் குர்பான் கொடுப்பது கட்டாயமாகும் ஹஜ் இப்ராத் حج الافراد திற்கு குர்பான் கொடுப்பது கட்டாயமில்லை.
3. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع விற்கு இரண்டு தவாஃபுகளும் , இரண்டு ஸயீகளும் செய்ய வேண்டும். அதாவது முதலாவது உம்ராவிற்காக ஒரு தவாஃபும் ஒரு ஸயீயும் செய்ய வேண்டும். அடுத்ததாக ஹஜ்ஜிக்காக ஒரு தவாஃபும் ஒரு ஸயீயும் செய்ய வேண்டும். ஹஜ் கிரான் حج القران ஹஜ் இப்ராத் حج الافراد ஆகிய இரண்டுக்கும் சுன்னத்தான ஒரு தவாஃபும் பர்ழான ஒரு தவாஃபும் பர்ழான ஒரு ஸயீயும் மட்டுமே செய்ய வேண்டும் இதில் சுன்னத்தான மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்ய வேண்டிய (தவாஃபுல் குதூம்) தவாஃபை விடுவதால் குற்ற ஏதும் இல்லை ஆனால் பர்ழான பெருநாளனன்று செய்ய வேண்டிய தவாஃபை அதாவது (தவாஃபுல் இபஃபாழா) கட்டாயம் செய்தாக வேண்டும் இது விடுபட்டால் ஹஜ் நிறைவேறாது. தவாஃபுல் குதூம் உடன் ஸயீ செய்திருந்தால் அவர் தவாஃபுல் இபஃபாழா விற்குப் பிறகு ஸயீ செய்ய தேவையில்லை.

இம்மூவகை கிரியைகளிலும் சிறந்தது ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع ஆகும் ஏனெனில் நபி صلي الله عليه وسلم அவர்கள் தமது தோழர்களுக்கு இதனையே செய்யுமாறு கூறினார்கள். அடுத்து சிறந்தது ஹஜ் கிரான் حج القران அடுத்ததாக சிறப்புக்குரியது ஹஜ் இப்ராத் حج الافراد ஆகும்.
இம்மூவகை கிரியைகளில் ஒன்றில் பிரவேசித்து விட்ட ஒருவர் பின்வரும் தல்பியாவை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ
لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْد وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
.

லப்bபைக் அல்லாஹும்ம லப்bபைக், லப்bபைக் லா ஷரீக்க லக்க லப்bபைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல் முல்க், லா ஷரீக்க லக்.
பொருள்:- இதோ உன்னிடம் ஆஜராகி விட்டேன். யா அல்லாஹ்வே! இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது, இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், அனைத்து அருற்களும், ஆட்;சியும் உனக்கே சொந்தம், உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது.

இந்த தல்பியா இஹ்ராம் செய்ததிலிருந்து ஆரம்பித்து உம்ராவாக இருந்தால் தவாஃபை ஆரம்பிப்பதுடனும் ஹஜ் என்றால் பெருநாளன்று ஜம்ரத்துல் அக்கபாவில் கல் எறிவதுடனும் முடிவடையும்.